Wednesday, 20 April 2011

No one was there for last 5 years in Senji

 Source: Dinamalar..


செஞ்சி:தி.மு.க.,வின் ஐந்து ஆண்டு ஆட்சியிலும், நடந்து முடிந்த தேர்தலிலும் ஒரே ஒரு அமைச்சர் கூட செஞ்சி ஒன்றியத்திற்கு வராமலேயே ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மக்களின் குறைகளையும், கருத்தையும் அறிந்து கொள்ள மன்னர்கள் அவ்வப்போது மக்களை சந்திப்பதும், மாறு வேடத்தில் நகர் வலம் வருவதும் தமிழகத்தின் பாரம்பரியம். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ஒன்றியத்திற்கு தி.மு.க.,வின் ஐந்தாண்டு ஆட்சியில் ஒரே ஒரு அமைச்சரின் பாதம் கூட படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதற்கு முன்பாக நடந்த ஆட்சியின் போது ஆண்டிற்கு ஒரு முறையாவது அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி அல்லது அரசியல் பொதுக்கூட்டம் நடந்து விடும். இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர்கள் கலந்துக் கொண்ட பொது நிகழ்ச்சியோ, அரசியல் கூட்டமோ ஒன்று கூட இப்பகுதியில் நடக்க வில்லை.செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த சில கிராமங்களுக்கான இலவச கலர் டி.வி., வழங்கும் நிகழ்ச்சியும், கான்கிரீட் வீடு கட்டுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் செஞ்சி பேரூராட்சியிலேயே நடந்தது.தேர்தல் வந்தால் அமைச்சர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிலும் ஏமாற்றமே கிட்டியது.
செஞ்சி தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டதால் தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு. க.,வின் தலைவர்களோ, அமைச்சர்களோ செஞ்சி ஒன்றியத்திற்கு பிரசாரத்திற்கு வரவில்லை.மக்கள் குறைகளை அதிகாரிகள் சரி செய்யாத போது சேர்மன், எம்.எல்.ஏ., ஆகியோரிடம் முறையிடுகின்றனர். இதிலும் பலன் கிடைக்க வில்லை எனில் அமைச்சர்கள் வரும் போது குறைகளை தெரிவிக்கின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளில் எந்த குறையையும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்கிற ஆதங்கம் செஞ்சி ஒன்றிய கிராம மக்களிடம் மேலோங்கி உள்ளது.

No comments:

Post a Comment