பிறப்பு: தமிழ் உதயம்
அவனை பார்க்கும் போதே சந்தேகத்துக்குரியவனாக தான் தெரிந்தான். ஒரு கோணத்தில் பார்த்தால் பரிதாபத்துக்குரியவனாகவும் இருந்தான். கைலி கட்டி இருந்தான். சற்றே அழுக்கான டி.சர்ட் அணிந்து இருந்தான். முள் முள்ளாய் தாடி. கைலியை கையில் தூக்கி பிடித்து கொண்டு, அந்த கடைத் தெருவுக்குள் நுழைந்தான்.

சின்னதும், பெரிதுமாய் - வரிசையாய் நகைக்கடைகள். அவன் நகை விற்கத்தான் வந்து இருக்கிறான். அவனை பார்த்த ஒருவர், "சார் நகை வாங்கணும்மா.. விற்கணும்மா.." என்று கேட்டார். இடைத்தரகர் போலும். "இல்ல சாரே" என்று வேகமாக நடந்தான்.
ஒரு கடையில் முதலாளியை தவிர எவரும் இல்லை. அந்த கடைக்குள் நுழைந்தான். முதலாளி ஒரு வார இதழை படித்து இருந்தார். நிமிர்ந்து "என்னப்பா"
"சார் ஒரு ஜுவல் விற்கணும்"
"உட்காருங்க" என்ற கடை முதலாளி, இவனை மேலும், கீழும் பார்த்தார். "உங்க நகையா இல்ல தெரிஞ்சவங்க நகையா"
"எனது நகை தான் சார். மனைவிக்கு உடம்பு சரியில்ல"
"நீங்க சிலோனா"
"ஆமா சார்" என்றான் தயங்கியவாறே.
"இருங்க. உறைகல் எடுத்து வரேன்" என்று கடைக்குள்ளேயே சின்னதாய் இருந்த அறைப்பக்கம் திரும்பி, "டேய் இங்க வா" என்று யாரையோ அழைத்தார். ஒரு சிறுவன் வந்தான். "பார்த்துக்கோ " என்றவர், அந்த சின்ன அறைக்குள் போனார். போன சில நிமிஷங்களில் திரும்ப வந்தார்.
"காப்பி குடிக்கிறிங்களா இல்ல கூல் டிரிங்க்ஸ்"
"எதுவும் வேணாம் சார்"
"டேய் ரெண்டு காப்பி வாங்கி வா" என்று பையனை அனுப்பினார். கடைக்காரர் நகையை எடை போட்டார். பிறகு உறைக்கல்லில் தேய்த்தார். உறைக்கல்லை அப்படியும், இப்படியும் பார்த்தார். பிறகு நகையையே பார்த்தார். இவனுக்கு அவர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவது போன்று தோன்றியது. "தங்கம் அவ்வளவு நல்லா இல்ல"
"அதுக்கு என்ன தொகையோ அதக் கொடுங்க"
"இருங்க. காபி வரட்டும்" பையன் காபியோடுவந்தான். "காபி குடிங்க"
அவன் காபி டம்ளரை எடுத்து வாயில் வைத்து போது - வாசலில் மோட்டார் சைக்கிள் சப்தம். எல்லோரும் திரும்பினர். போலிஸ் இன்ஸ்பெக்டர். பின்னாலேயே சைக்கிளில் இரண்டு ஏட்டுகள்.
இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். "வாங்க சார். இவன் தான் சிலோன்"... உள்ளே நுழைந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர், அவன் பிடரியில் குத்தினார். "சிலோனா. திருடி விற்க வந்து இருக்கீயா" என்று இன்னொரு அடி அடித்தார்.
"இல்ல சார். இது என் நகை. நா திருடன் இல்ல"
"எனக்கு தெரியாதா. நீ சொல்றியா. ஏட்டு விலங்கை போடு. போலீஸ் ஸ்டேஷ்ன்ல வந்து பேசு. சயனைட் வைச்சு இருக்கானான்னு பாரு. தின்னு தொலைக்கப் போறான்... என்ன செட்டியாரே" என்று ஸ்டூலில் அமர்ந்தார் இன்ஸ்பெக்டர்.
"சாருக்கு பெப்சி வாங்கிட்டு வாடா" என்று கடைக்காரர் இன்னொரு ஸ்டூலில் அமர்ந்தார். "பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். நகை விக்கணும்னு வந்தான். எனக்கு சந்தேகம். சிலோன் ஆளு மாதிரி இருக்கு. நகையும் மூணு பவுனு. சிலோனான்னு கேட்டதுக்கு யோசிச்சு மண்டை ஆட்டினான். உட்கார சொல்லிட்டு ரூமுக்குள் இருந்த போன்ல தகவல் சொன்னேன்"
இன்ஸ்பெக்டர் சிகரெட்டை பற்ற வைத்தார். பெப்சி வந்தது. குடித்தார்.
"யோவ் ஏட்டு. ரிக் ஷால ஏத்து அவனை. தீவிரவாதி மாதிரி இருக்கான்."
"சார். நா திருடன் இல்ல. மனைவிக்கு உடல் நலம் இல்லை. வைத்திய செலவுக்கா செயினை விற்க வந்தேன். என்னை விட்டுடுங்க" என்று கெஞ்சினான். "வாயை மூடுடா" என்று முகத்தில் ஒரு குத்து குத்தினார். பல் உடைந்தொ என்னவொ. ரத்தம் கொட்டியது. கடைக்கு முன் கூட்டம் கூடி விட்டது.
ரிக் ஷாவுடன் வந்தார் ஏட்டு. ரிக் ஷாவில் ஏற்றினர். "சைக்கிள் இருக்கட்டும். ரிக் ஷால ஏறுங்க. தப்பிச்சிடப்போறான்" என்றார் இன்ஸ்பெக்டர். ரிக் ஷா கிளம்பியது. "ஜாக்கிரதை. தப்பிச்சான்னா தொலைச்சோம்" வெளியே கூட்டம் வேடிக்கை பார்த்தது. "மடில குண்டு வைச்சு இருக்கானாம்" யாரோ சொன்னார்கள்.
ஸ்டேஷனில், "நீ புலி தானே" முகத்தில் ஒரு அறை விழுந்தது.
"இல்ல சார். நா இங்க முகாம்ல தான் இருக்கேன். மனைவி சுகவீனமா இருக்காங்க. முகாம்ல டாக்டர்ஸ் சாரியா பார்க்கல. அதான் ப்ரைவேட் ஹோஸ்பிடல்ல பார்க்கலாம்னு"
"பொய்யா சொல்றே. நீ புலி தானே" முகத்தில் இன்னொரு அறை.
"பனியன் லுங்கியை கழட்டு. அருணா கொடியையும் கழட்டுடா" அவன் ஜட்டியுடன் நின்றான்.
"லாக்கப்புல வைச்சு நாலு மிதி மிதிச்சா தான் சொல்வான் போல. உள்ள கொண்டு போய்யா" கான்ஸ்டபிள்கள் அவனை உள்ளே இழுத்து போயினர். இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். "யோவ் ரைட்டரை கூப்பிடு. இவன் சொல்றதை எழுத சொல்லு" என்றாவாறே இவன் வயிற்றில் ஒரு குத்து குத்தினார். "பேரு என்னடா"
"பத்மனாபன்"
"எந்த ஊருடா"
"மன்னார்"
"எந்த இயக்கம்டா"
"இல்ல சார்" வயிற்றில் இன்னொரு குத்து. "சார் நீங்க எம்.ஜி.ஆர் நகர் முகாம்ல என்னை விசாரிச்சு பாருங்க" என்று சற்றே தைரியம் வந்தவனாக சொன்னான். "அகதினா அடையாள அட்டை எங்கேடா"
"முகாம்ல இருக்கு"
"அத அங்க வைச்சிட்டு - வெளிய எதுக்கு வந்தே" என்றவாறு வயிற்றில் ஒரு குத்து குத்த - வயிற்றை பிடித்து கொண்டு உட்கார்ந்தான். "சார், செத்து தொலைச்சிடப் போறான்"
"செத்தா நல்லது தான். புலின்னு பட்டைய கட்டிடலாம்"
"எந்திரிடா" அவன் தட்டு தடுமாறி எழுந்தான். "உண்மைய சொல்லு. இங்க யார் யார் இருக்கா"
"இங்க மனைவி பிள்ளைங்களோட இருக்கேன். மனைவி பேர் கலாவதி. இரண்டு குழந்தைங்க... செல்வம், ராஜேஸ்வரி"
"யாருகிட்ட புளுகறே. எத்தனை இடத்தில் திருடினே. எவ்வளவு நகைய வித்தே. உன் கூட்டாளிங்க எல்லாம் யாரு"
"சார். நா அகதி. விசாரிங்க சார்"
"அடையாள அட்டைய எடுத்துவராம்ம பேச்சா பேசுற." என்று வயிற்றில் மீண்டும் குத்து. இப்போது சரிந்து விழுந்தவன் எழுந்திரிக்கவே இல்லை. "கிடக்கட்டும். நீ போய் முகாம்ல விசாரி. பத்மனாபன்னு எவனும் இருக்கானான்னு கேளு. பொண்டாட்டி பேரு கலாவதியாம். விசாரி. அடையாள அட்டை இருந்தா வாங்கிட்டு வா. நானும் அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு போன் பண்றேன். நீ முதல்ல ஸ்டேஷனுக்கே போ. யோவ் ஏட்டு நீயும் போ" இரண்டு பேர்களும் கிளம்பினார்கள்.
"டேய், உண்மைய சொல்லிடு. அடிவாங்கி செத்தாலும் சாவேன் - உண்மையை சொல்ல மாட்டேன்னு அடம்பிடிக்கிறே. வந்த இடத்துல கம்னு இருக்க வேண்டியது தானேடா. ம். உங்களால எங்களுக்கு தலைவலி"
"யோவ்.. இவன் மூஞ்சி தண்ணிய தெளி. இன்னும் நாலு போடு போட்டா தான் உண்மைய சொல்வான் போலிருக்கு"
"மூக்கில் இருந்து நிறைய ரத்தம் வருது சார்"
"இனி கால்ல தான் போடணும். உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம்ம அடிச்சாச்சு. உண்மைய சொல்வேனாங்கிறான். இவங்கள எப்படி டீல் பண்றதுன்னு தெரியல" என்ற இன்ஸ்பெக்டர், திரும்ப லாக்கப்புக்குள் நுழைந்து - உட்கார்ந்து இருந்த அவனது இரண்டு கால்களையும் பதம் பார்த்து விட்டார். அவன் அலறினானே ஒழிய - அவர் எதிர்பார்க்கும் எந்த விஷயத்தையும் சொல்லவில்லை.
அவன் தீவிரவாதியாக இருந்தால் தானே. அவன் அகதி. இன்ஸ்பெக்டர் வெளியே போனார். ரத்தம் வழிந்தது. துடைக்க அவனுக்கு மனசு இல்லை. மரத்து போனது எல்லாமே. இதற்கு முன்னும் இரண்டொரு முறை - அவனை அகதி முகாமில் இருந்து பிடித்து போய் லாக்கப்பில் வைத்து இருக்கின்றனர்.
ஒரு முறை - எங்கேயோ வெடித்த வெடிகுண்டு கேஸில் விசாரனைக்காக அவனை அழைத்து சென்றனர். இரண்டு நாள் வைத்திருந்து விட்டு விட்டு விட்டனர். பிறகு இன்னொரு முறை அகதி முகாம் அருகே ஒரு வீட்டில் கொள்ளை போனது.
போலீஸ் நாய் அகதி முகாம் வரை சென்றது. அதனால் தான் உட்பட பதினைந்து பேரை பிடித்து போய் மறு நாள் விட்டு விட்டனர். இப்போது மாதிரி, அடித்து உதைத்து சித்திரவதை செய்யவில்லை.
மணி இப்போது எத்தனை... கலாவதி தேடுவாள். கலாவதிக்கு டைபாய்டு. முகாமில் நல்ல சிகிச்சை இல்லை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான அகதிகளை பராமரிப்பதே பெரிய விஷயம். இவர்களும் துரத்தி விட்டால் என்ன பண்ணுவது.
பத்து கிராம் செயின் கலாவதியிடம் மிச்சமாய் இருந்தது. இந்தியாவுக்கு வரும் போது, நிறைய நகைகளை கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் விற்றாயிற்று. பாக்கி இது மட்டும் தான். இதற்கு முன் எல்லாம் பக்கத்திலேயே உள்ள ஆசாரியிடம் விற்பதுண்டு. அவர், நமது கஷ்டத்தை புரிந்து கொண்டு அடிமாட்டு விலைக்கு கேட்பார். இப்போது அவரிடம் விற்க இஷ்டமில்லாமல் பஜாருக்கு வந்து விற்போம் என்று வந்தால் - இப்படியாயிற்று.
இப்போது தோன்றுகிறது. அவரிடமே விற்று இருக்கலாம் என்று. செயினை போலீஸ் வைத்திருக்கிறார்கள். விசாரித்து விட்டு வெளியே அனுப்பும் போது செயினை கொடுத்து விடுவார்கள் தானே.
இனி, அடுத்த கப்பல் கிளம்பும் போது - சிலோனுக்கே போய்விட வேண்டியது தான். செத்தாலும் நம் மண்ணிலேயே சாவோம். நாம் மட்டுமா சாக போகிறோம். ஒரு இனமே பூண்டோடு அழியும் போது. வாழ்ந்த போது - எல்லோருமாய் தானே வாழ்ந்தோம். ஆனால் மரணத்திற்கு அஞ்சி திசைக்கு ஒருவராய் ஓட வேண்டும். அங்கேயே சாவோம். வாழ்வதனாலும் அங்கேயே வாழ்வோம்.
உலகிற்கே ஒளிகாட்டும் ஆதவன், எங்களை மட்டும் இருளில் விட்டு விட்டு போவானா? என்றாவது எங்களுக்கு விடியல் வராதா? நாங்கள் என்ன பாவம் பண்ணினோம். இப்படி அலைந்து சிதைந்து சின்ன பின்னமாகி.
மாலையாகிவிட்டது.
அவனை எழுப்பினார்கள். "வெளிய கொண்டு வாய்யா" இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டார். அடி வாங்கி மயங்கி விழுந்தவன் அப்படியே உறங்கி போனான். உலகத்தையே மறந்திருந்தான். அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. "சாகிறதுக்குன்னே வந்திருக்கான். எழுந்திரிய்யா. அய்யா கூப்பிடுறாரு"
அவனால் எழ முடியவில்லை. விலங்கு பூட்டிய கை. உடம்பெங்கும் காயம். தரையில் கையை ஊன்ற முடியவில்லை. எப்படியோ தட்டு தடுமாறி எழுந்தான். "ஏப்பா, தூக்கிவிடவா..." என்று ஒரு கான்ஸ்டபிள் கிண்டலாய் கேட்டான். அவன் கண்கலங்கினான். இது எங்கள் இனத்தின் சாபக்கேடு, எதிரியும் அடிக்கிறான். சகோதரனும் அடிக்கிறான்... நண்பனும் அடிக்கிறான்.
வெளியே தடுமாறியவாறு நடந்து வந்தான். "விலங்கை கழட்டுய்யா" விலங்கை கழட்டினார்கள். "வெளிய வரும்போது அடையாள அட்டையோட வரணும்யா. நீ திருட்டுப்பய மாதிரி இருக்கே. பதிலும் சொல்ல தெரியல. அடி வாங்கினது தான் மிச்சம். நீ சொன்னது எல்லாம் சரியா தான் இருக்கு. உன் உடுப்பை மாட்டிட்டு கிளம்பு"
அவன் டிரஸ் அவன் மீது தூக்கி எறியப்பட்டது. லுங்கியை கட்டி கொண்டான். பனியன் அணிந்து கொண்டான். "இந்தா.. வேகமா கிளம்பு. பொழுது சாயறதுக்குள்ள முகாமுக்கு போய் சேரு. அப்புறம் வேற எவனும் பிடிச்சு இனி நாலு சாத்து சாத்தப்போறான்" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, பெரிய ஜோக் கேட்டது போல கான்ஸ்டபிள்கள் சிரித்தனர்.
"சார். என் சங்கிலிய கொடுங்க" தயங்கினவாறே கேட்டான்.
"திரும்ப உள்ள விட்டு நாலு போடு போடணுமா. பேசாம போயிரு. சங்கிலி வேணுமாம்ல சங்கிலி. போய்யா போ" என்றார் கான்ஸ்டபிள்.
அவன் அதிர்ந்தான் செயினை தரமாட்டார்களா?
"ஒழுங்கா போய் சேரணும்மா வேணாம்மா... போ. போ" அவர்கள் விரட்டினர். அவன் மனம் சோர்ந்து நடந்தான். கைலி முழங்கால் ரத்தத்தில் நனைந்தது. கண்கள் கண்ணீரில் நனைந்தன.
அவனை பார்க்கும் போதே சந்தேகத்துக்குரியவனாக தான் தெரிந்தான். ஒரு கோணத்தில் பார்த்தால் பரிதாபத்துக்குரியவனாகவும் இருந்தான். கைலி கட்டி இருந்தான். சற்றே அழுக்கான டி.சர்ட் அணிந்து இருந்தான். முள் முள்ளாய் தாடி. கைலியை கையில் தூக்கி பிடித்து கொண்டு, அந்த கடைத் தெருவுக்குள் நுழைந்தான்.

சின்னதும், பெரிதுமாய் - வரிசையாய் நகைக்கடைகள். அவன் நகை விற்கத்தான் வந்து இருக்கிறான். அவனை பார்த்த ஒருவர், "சார் நகை வாங்கணும்மா.. விற்கணும்மா.." என்று கேட்டார். இடைத்தரகர் போலும். "இல்ல சாரே" என்று வேகமாக நடந்தான்.
ஒரு கடையில் முதலாளியை தவிர எவரும் இல்லை. அந்த கடைக்குள் நுழைந்தான். முதலாளி ஒரு வார இதழை படித்து இருந்தார். நிமிர்ந்து "என்னப்பா"
"சார் ஒரு ஜுவல் விற்கணும்"
"உட்காருங்க" என்ற கடை முதலாளி, இவனை மேலும், கீழும் பார்த்தார். "உங்க நகையா இல்ல தெரிஞ்சவங்க நகையா"
"எனது நகை தான் சார். மனைவிக்கு உடம்பு சரியில்ல"
"நீங்க சிலோனா"
"ஆமா சார்" என்றான் தயங்கியவாறே.
"இருங்க. உறைகல் எடுத்து வரேன்" என்று கடைக்குள்ளேயே சின்னதாய் இருந்த அறைப்பக்கம் திரும்பி, "டேய் இங்க வா" என்று யாரையோ அழைத்தார். ஒரு சிறுவன் வந்தான். "பார்த்துக்கோ " என்றவர், அந்த சின்ன அறைக்குள் போனார். போன சில நிமிஷங்களில் திரும்ப வந்தார்.
"காப்பி குடிக்கிறிங்களா இல்ல கூல் டிரிங்க்ஸ்"
"எதுவும் வேணாம் சார்"
"டேய் ரெண்டு காப்பி வாங்கி வா" என்று பையனை அனுப்பினார். கடைக்காரர் நகையை எடை போட்டார். பிறகு உறைக்கல்லில் தேய்த்தார். உறைக்கல்லை அப்படியும், இப்படியும் பார்த்தார். பிறகு நகையையே பார்த்தார். இவனுக்கு அவர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவது போன்று தோன்றியது. "தங்கம் அவ்வளவு நல்லா இல்ல"
"அதுக்கு என்ன தொகையோ அதக் கொடுங்க"
"இருங்க. காபி வரட்டும்" பையன் காபியோடுவந்தான். "காபி குடிங்க"
அவன் காபி டம்ளரை எடுத்து வாயில் வைத்து போது - வாசலில் மோட்டார் சைக்கிள் சப்தம். எல்லோரும் திரும்பினர். போலிஸ் இன்ஸ்பெக்டர். பின்னாலேயே சைக்கிளில் இரண்டு ஏட்டுகள்.
இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். "வாங்க சார். இவன் தான் சிலோன்"... உள்ளே நுழைந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர், அவன் பிடரியில் குத்தினார். "சிலோனா. திருடி விற்க வந்து இருக்கீயா" என்று இன்னொரு அடி அடித்தார்.
"இல்ல சார். இது என் நகை. நா திருடன் இல்ல"
"எனக்கு தெரியாதா. நீ சொல்றியா. ஏட்டு விலங்கை போடு. போலீஸ் ஸ்டேஷ்ன்ல வந்து பேசு. சயனைட் வைச்சு இருக்கானான்னு பாரு. தின்னு தொலைக்கப் போறான்... என்ன செட்டியாரே" என்று ஸ்டூலில் அமர்ந்தார் இன்ஸ்பெக்டர்.
"சாருக்கு பெப்சி வாங்கிட்டு வாடா" என்று கடைக்காரர் இன்னொரு ஸ்டூலில் அமர்ந்தார். "பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். நகை விக்கணும்னு வந்தான். எனக்கு சந்தேகம். சிலோன் ஆளு மாதிரி இருக்கு. நகையும் மூணு பவுனு. சிலோனான்னு கேட்டதுக்கு யோசிச்சு மண்டை ஆட்டினான். உட்கார சொல்லிட்டு ரூமுக்குள் இருந்த போன்ல தகவல் சொன்னேன்"
இன்ஸ்பெக்டர் சிகரெட்டை பற்ற வைத்தார். பெப்சி வந்தது. குடித்தார்.
"யோவ் ஏட்டு. ரிக் ஷால ஏத்து அவனை. தீவிரவாதி மாதிரி இருக்கான்."
"சார். நா திருடன் இல்ல. மனைவிக்கு உடல் நலம் இல்லை. வைத்திய செலவுக்கா செயினை விற்க வந்தேன். என்னை விட்டுடுங்க" என்று கெஞ்சினான். "வாயை மூடுடா" என்று முகத்தில் ஒரு குத்து குத்தினார். பல் உடைந்தொ என்னவொ. ரத்தம் கொட்டியது. கடைக்கு முன் கூட்டம் கூடி விட்டது.
ரிக் ஷாவுடன் வந்தார் ஏட்டு. ரிக் ஷாவில் ஏற்றினர். "சைக்கிள் இருக்கட்டும். ரிக் ஷால ஏறுங்க. தப்பிச்சிடப்போறான்" என்றார் இன்ஸ்பெக்டர். ரிக் ஷா கிளம்பியது. "ஜாக்கிரதை. தப்பிச்சான்னா தொலைச்சோம்" வெளியே கூட்டம் வேடிக்கை பார்த்தது. "மடில குண்டு வைச்சு இருக்கானாம்" யாரோ சொன்னார்கள்.
ஸ்டேஷனில், "நீ புலி தானே" முகத்தில் ஒரு அறை விழுந்தது.
"இல்ல சார். நா இங்க முகாம்ல தான் இருக்கேன். மனைவி சுகவீனமா இருக்காங்க. முகாம்ல டாக்டர்ஸ் சாரியா பார்க்கல. அதான் ப்ரைவேட் ஹோஸ்பிடல்ல பார்க்கலாம்னு"
"பொய்யா சொல்றே. நீ புலி தானே" முகத்தில் இன்னொரு அறை.
"பனியன் லுங்கியை கழட்டு. அருணா கொடியையும் கழட்டுடா" அவன் ஜட்டியுடன் நின்றான்.
"லாக்கப்புல வைச்சு நாலு மிதி மிதிச்சா தான் சொல்வான் போல. உள்ள கொண்டு போய்யா" கான்ஸ்டபிள்கள் அவனை உள்ளே இழுத்து போயினர். இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். "யோவ் ரைட்டரை கூப்பிடு. இவன் சொல்றதை எழுத சொல்லு" என்றாவாறே இவன் வயிற்றில் ஒரு குத்து குத்தினார். "பேரு என்னடா"
"பத்மனாபன்"
"எந்த ஊருடா"
"மன்னார்"
"எந்த இயக்கம்டா""இல்ல சார்" வயிற்றில் இன்னொரு குத்து. "சார் நீங்க எம்.ஜி.ஆர் நகர் முகாம்ல என்னை விசாரிச்சு பாருங்க" என்று சற்றே தைரியம் வந்தவனாக சொன்னான். "அகதினா அடையாள அட்டை எங்கேடா"
"முகாம்ல இருக்கு"
"அத அங்க வைச்சிட்டு - வெளிய எதுக்கு வந்தே" என்றவாறு வயிற்றில் ஒரு குத்து குத்த - வயிற்றை பிடித்து கொண்டு உட்கார்ந்தான். "சார், செத்து தொலைச்சிடப் போறான்"
"செத்தா நல்லது தான். புலின்னு பட்டைய கட்டிடலாம்"
"எந்திரிடா" அவன் தட்டு தடுமாறி எழுந்தான். "உண்மைய சொல்லு. இங்க யார் யார் இருக்கா"
"இங்க மனைவி பிள்ளைங்களோட இருக்கேன். மனைவி பேர் கலாவதி. இரண்டு குழந்தைங்க... செல்வம், ராஜேஸ்வரி"
"யாருகிட்ட புளுகறே. எத்தனை இடத்தில் திருடினே. எவ்வளவு நகைய வித்தே. உன் கூட்டாளிங்க எல்லாம் யாரு"
"சார். நா அகதி. விசாரிங்க சார்"
"அடையாள அட்டைய எடுத்துவராம்ம பேச்சா பேசுற." என்று வயிற்றில் மீண்டும் குத்து. இப்போது சரிந்து விழுந்தவன் எழுந்திரிக்கவே இல்லை. "கிடக்கட்டும். நீ போய் முகாம்ல விசாரி. பத்மனாபன்னு எவனும் இருக்கானான்னு கேளு. பொண்டாட்டி பேரு கலாவதியாம். விசாரி. அடையாள அட்டை இருந்தா வாங்கிட்டு வா. நானும் அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு போன் பண்றேன். நீ முதல்ல ஸ்டேஷனுக்கே போ. யோவ் ஏட்டு நீயும் போ" இரண்டு பேர்களும் கிளம்பினார்கள்.
"டேய், உண்மைய சொல்லிடு. அடிவாங்கி செத்தாலும் சாவேன் - உண்மையை சொல்ல மாட்டேன்னு அடம்பிடிக்கிறே. வந்த இடத்துல கம்னு இருக்க வேண்டியது தானேடா. ம். உங்களால எங்களுக்கு தலைவலி"
"யோவ்.. இவன் மூஞ்சி தண்ணிய தெளி. இன்னும் நாலு போடு போட்டா தான் உண்மைய சொல்வான் போலிருக்கு"
"மூக்கில் இருந்து நிறைய ரத்தம் வருது சார்"
"இனி கால்ல தான் போடணும். உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம்ம அடிச்சாச்சு. உண்மைய சொல்வேனாங்கிறான். இவங்கள எப்படி டீல் பண்றதுன்னு தெரியல" என்ற இன்ஸ்பெக்டர், திரும்ப லாக்கப்புக்குள் நுழைந்து - உட்கார்ந்து இருந்த அவனது இரண்டு கால்களையும் பதம் பார்த்து விட்டார். அவன் அலறினானே ஒழிய - அவர் எதிர்பார்க்கும் எந்த விஷயத்தையும் சொல்லவில்லை.
அவன் தீவிரவாதியாக இருந்தால் தானே. அவன் அகதி. இன்ஸ்பெக்டர் வெளியே போனார். ரத்தம் வழிந்தது. துடைக்க அவனுக்கு மனசு இல்லை. மரத்து போனது எல்லாமே. இதற்கு முன்னும் இரண்டொரு முறை - அவனை அகதி முகாமில் இருந்து பிடித்து போய் லாக்கப்பில் வைத்து இருக்கின்றனர்.
ஒரு முறை - எங்கேயோ வெடித்த வெடிகுண்டு கேஸில் விசாரனைக்காக அவனை அழைத்து சென்றனர். இரண்டு நாள் வைத்திருந்து விட்டு விட்டு விட்டனர். பிறகு இன்னொரு முறை அகதி முகாம் அருகே ஒரு வீட்டில் கொள்ளை போனது.
போலீஸ் நாய் அகதி முகாம் வரை சென்றது. அதனால் தான் உட்பட பதினைந்து பேரை பிடித்து போய் மறு நாள் விட்டு விட்டனர். இப்போது மாதிரி, அடித்து உதைத்து சித்திரவதை செய்யவில்லை.
மணி இப்போது எத்தனை... கலாவதி தேடுவாள். கலாவதிக்கு டைபாய்டு. முகாமில் நல்ல சிகிச்சை இல்லை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான அகதிகளை பராமரிப்பதே பெரிய விஷயம். இவர்களும் துரத்தி விட்டால் என்ன பண்ணுவது.
பத்து கிராம் செயின் கலாவதியிடம் மிச்சமாய் இருந்தது. இந்தியாவுக்கு வரும் போது, நிறைய நகைகளை கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் விற்றாயிற்று. பாக்கி இது மட்டும் தான். இதற்கு முன் எல்லாம் பக்கத்திலேயே உள்ள ஆசாரியிடம் விற்பதுண்டு. அவர், நமது கஷ்டத்தை புரிந்து கொண்டு அடிமாட்டு விலைக்கு கேட்பார். இப்போது அவரிடம் விற்க இஷ்டமில்லாமல் பஜாருக்கு வந்து விற்போம் என்று வந்தால் - இப்படியாயிற்று.
இப்போது தோன்றுகிறது. அவரிடமே விற்று இருக்கலாம் என்று. செயினை போலீஸ் வைத்திருக்கிறார்கள். விசாரித்து விட்டு வெளியே அனுப்பும் போது செயினை கொடுத்து விடுவார்கள் தானே.
இனி, அடுத்த கப்பல் கிளம்பும் போது - சிலோனுக்கே போய்விட வேண்டியது தான். செத்தாலும் நம் மண்ணிலேயே சாவோம். நாம் மட்டுமா சாக போகிறோம். ஒரு இனமே பூண்டோடு அழியும் போது. வாழ்ந்த போது - எல்லோருமாய் தானே வாழ்ந்தோம். ஆனால் மரணத்திற்கு அஞ்சி திசைக்கு ஒருவராய் ஓட வேண்டும். அங்கேயே சாவோம். வாழ்வதனாலும் அங்கேயே வாழ்வோம்.
உலகிற்கே ஒளிகாட்டும் ஆதவன், எங்களை மட்டும் இருளில் விட்டு விட்டு போவானா? என்றாவது எங்களுக்கு விடியல் வராதா? நாங்கள் என்ன பாவம் பண்ணினோம். இப்படி அலைந்து சிதைந்து சின்ன பின்னமாகி.
மாலையாகிவிட்டது.
அவனை எழுப்பினார்கள். "வெளிய கொண்டு வாய்யா" இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டார். அடி வாங்கி மயங்கி விழுந்தவன் அப்படியே உறங்கி போனான். உலகத்தையே மறந்திருந்தான். அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. "சாகிறதுக்குன்னே வந்திருக்கான். எழுந்திரிய்யா. அய்யா கூப்பிடுறாரு"
அவனால் எழ முடியவில்லை. விலங்கு பூட்டிய கை. உடம்பெங்கும் காயம். தரையில் கையை ஊன்ற முடியவில்லை. எப்படியோ தட்டு தடுமாறி எழுந்தான். "ஏப்பா, தூக்கிவிடவா..." என்று ஒரு கான்ஸ்டபிள் கிண்டலாய் கேட்டான். அவன் கண்கலங்கினான். இது எங்கள் இனத்தின் சாபக்கேடு, எதிரியும் அடிக்கிறான். சகோதரனும் அடிக்கிறான்... நண்பனும் அடிக்கிறான்.
வெளியே தடுமாறியவாறு நடந்து வந்தான். "விலங்கை கழட்டுய்யா" விலங்கை கழட்டினார்கள். "வெளிய வரும்போது அடையாள அட்டையோட வரணும்யா. நீ திருட்டுப்பய மாதிரி இருக்கே. பதிலும் சொல்ல தெரியல. அடி வாங்கினது தான் மிச்சம். நீ சொன்னது எல்லாம் சரியா தான் இருக்கு. உன் உடுப்பை மாட்டிட்டு கிளம்பு"
அவன் டிரஸ் அவன் மீது தூக்கி எறியப்பட்டது. லுங்கியை கட்டி கொண்டான். பனியன் அணிந்து கொண்டான். "இந்தா.. வேகமா கிளம்பு. பொழுது சாயறதுக்குள்ள முகாமுக்கு போய் சேரு. அப்புறம் வேற எவனும் பிடிச்சு இனி நாலு சாத்து சாத்தப்போறான்" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, பெரிய ஜோக் கேட்டது போல கான்ஸ்டபிள்கள் சிரித்தனர்."சார். என் சங்கிலிய கொடுங்க" தயங்கினவாறே கேட்டான்.
"திரும்ப உள்ள விட்டு நாலு போடு போடணுமா. பேசாம போயிரு. சங்கிலி வேணுமாம்ல சங்கிலி. போய்யா போ" என்றார் கான்ஸ்டபிள்.
அவன் அதிர்ந்தான் செயினை தரமாட்டார்களா?
"ஒழுங்கா போய் சேரணும்மா வேணாம்மா... போ. போ" அவர்கள் விரட்டினர். அவன் மனம் சோர்ந்து நடந்தான். கைலி முழங்கால் ரத்தத்தில் நனைந்தது. கண்கள் கண்ணீரில் நனைந்தன.
No comments:
Post a Comment