தலைப்பு நல்கிய ஜாவீத்க்கு நன்றி
அறந்தாங்கியில் உள்ள பிரபல பள்ளி.
பன்னிரெண்டாம் வகுப்பு.
இன்று தான் கடைசி நாள். இன்றோடு 12ம் வகுப்புகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். இனி தேர்வுகள் மட்டுமே இருந்தது.
இன்றோடு வகுப்புகள் முடிந்தது இனி தேர்வு முடிந்ததற்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்க்க முடியுமோ முடியாதோ. நண்பர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பர வாழ்த்துக்கள், நன்றிகள் என்று கண்ணிருடன் விடை பெற்று கொண்டிருந்தார்கள். நண்பர்களை பிரிந்து செல்வது சற்று கடினம் தான்.
சிவா ஒவ்வொரு புத்தகமாக எடுத்து வைத்து கொண்டிருந்தான். சங்கர், சிவா இருவரும் சைக்கிளில் தான் ஒன்றாக வீட்டுக்கு செல்வார்கள். இருவரின் வீடும் அருகருகில். இருவரின் முகமும் சற்று வருத்தம் கலந்து இருந்தது.
இருவரும் வகுப்பை விட்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்துகொண்டுஅதை தள்ளி கொண்டே நடந்து சென்றார்கள். வழக்கமாக வகுப்பு முடிந்து மணி அடித்ததும் சிட்டாய் பறக்கும் இருவரும் இன்று இவ்வாறு நடந்து சென்றது ஆர்ச்சர்யம் இல்லை.
நடந்து செல்லும் வழியில் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டே சென்றனர். சிவா தான் Teacher Training சேரப் போவதாக சொன்னான். சங்கர் தான் அவ்வூரிலயே Arts ans Science சேர போவதாக சொன்னான். இருவரும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
வீடு வந்ததும் தேர்வன்று சந்திப்பதாக சொல்லி விட்டு சென்றனர்.
தேர்வுகள் நடந்து முடிந்து, முடுவுகளும் வெளிஇடப்பட்டது. இவர்கள் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் விருப்பப்படி இருவரும் கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் இருவரின் வீட்டில் இருந்தவர்களும் அவர்களை பொறியியல் படிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் குடும்ப சூழ் நிலை அவர்களை பயமுறுத்தியது. சிவா நான்கு தங்கைகளுடன் பிறந்தவன். சங்கர் ஒரு தங்கையுடன் பிறந்தவன். இருவரில் சிவாவின் நிலைமைதான் சற்று மோசமானது.
தங்கைகளை படிக்க வைத்து நல்ல இடத்தில திருமணம் செய்துவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் அவன் T.T விண்ணப்பித்து இருந்தான். ஆனால் சொந்தங்கள் பேச்சை தட்ட முடியாமல் அவனும் கரூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.
சிவா பன்னிரெண்டாவது படித்து முடித்த அதே நேரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளியில் இருந்து முதல் வகுப்பு தேர்ச்சியுடன் வெளியே வந்தாள் சக்தி. இவளும் சிவா சேர்ந்த அதே கல்லூரியில் சேர்ந்தாள்.
இது வரை வீட்டிலிருந்தே பள்ளி சென்ற சிவா முதல் முறையாக ஹாஸ்டலில் தங்க போகிறான். தமிழ் வழியில்கல்வி பயின்றவன் முதல் முறையாக ஆங்கில வழியில் கல்வி பயில போகிறான். எண்ணற்ற கனவுகளோடு கல்லூரியில் சேர்ந்தான்.
இவனைபோலவே இன்னும் சிலர் அதே கல்லூரியில் இவனுடன் சேர்ந்தனர். ஆனால் இவர்கள் தான் சிவாவின் வாழ்கையை மாற்ற போகிறவர்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
(இதுக்கு மேல என்னால இந்த மாதிரி தமிழ்ல எழுத முடியல).... இனிமே தங்கலிஷ்லையே எழுதறேன்..... மன்னிக்கவும் நண்பர்களே ...
ஹாஸ்டல்ல சேர்ந்த முதல் நாள்அவன் ரூம் மேட்டாக வந்தவங்க ராஜா, செந்தில் , செல்வா (எ) செல்வகுமார். இந்த நாலு பேருமே நாலு விதம். ஒருத்தன் பேசவே மாட்டன். ஒருத்தன் பேசியே கொல்வான். ஒருத்தன் காமெடி பீசு. இது யார் யாருன்னு சொன்னா என்ன விரட்டி விரட்டி அடிப்பாங்க அதனால் அப்படியே விட்ட்ருவோம். ஆனா கூடிய சீக்கிரம் உளறி விடுவேன். அது மட்டும் கன்பார்ம்.
காலேஜ் ஜாயின் பன்ன முதல் நாள்.
காலேஜ்ல பர்ஸ்ட் இயர் பர்ஸ்ட் செம் எல்லா டிபர்ட்மெண்டுக்கும் ஒரே சப்ஜெக்ட் தான் அதனால மிக்ஸ் பண்ணி தான் கிளாஸ் பிருச்சு விட்ருப்பாங்க.
அப்படி வந்து சேந்தவ தான் சக்தி. சொல்ல போனா இவங்க நாலு பேரும் ஒரே Department. அதனால எல்லோரும் ஒரே கிளாஸ் தான்.
ஒரு சில பேருக்கு பர்ஸ்ட் சைட் லவ் மேல நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு பத்து பழகுன பின்னாடி தான் லவ் வரும்.ஒரு சிலருக்கு சும்மா பிரெண்ட்ஸ் ஏத்தி விட்டு லவ் வரும்.
இவங்க லவ் எப்படின்னு போக போக புருஞ்சுக்கு வீங்க.
கிளாஸ் ல மட்டும் தான் பசங்க பொண்ணுங்கன்னு தனி தனிய இருக்கணும். லேப்ல அஞ்சு அஞ்சு நம்பரா பிரிச்சு விற்றுவாங்க. அன்னைக்கி கடைசி பீரியட் தான் லேப் (என்ன லேப்ன்னு தெரியல).
அந்த கூட்டத்துல இவங்க (அதாங்க நம்ம ஹீரோ ஹீரோயின்) ஒரே பேட்ச்ல வந்தாங்க.
அப்ப தான் இவங்க ரெண்டு பேரும்அவங்க அவங்க பேர் என்னன்னு கேக்குறாங்க. நம்ம ஹீரோ நம்லமாதிரி தங்கலிஷ் தான்.
ஆனா இந்த பொண்ணுங்க இருக்காங்களே பசங்க பக்கத்துல வர்ற வரைக்கும் தமிழில் தான் பேசுவாங்க ஆனா பசங்க பக்கத்துல வந்தா மட்டும் ஏதோ எலிசபெத் சொந்த காரி கணக்கா பேசுவாங்க.
"ஹாய்"
"ஹாய்"
" என் பேர் சிவா "
"ஐ அம் சக்தி" (நான் சொல்லல.... இந்த பொண்ணுங்களே இப்படிதான் )
சோ ரெண்டு பேரும் அடுத்தவங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க.
முதல் நாள் லேப்ல அப்படியொண்ணும் பெருசா வேலை இருக்காது. லேப் முடுஞ்சு வெளியே வரும் போது bye சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
இப்படியே ஒரு ரெண்டு மாதம் போச்சு.
(First Semester மட்டும் எல்லா Department labum செய்யணும் )
அப்படி ஒரு நாள் மெக்கானிகல் லேப்ல வெல்டிங் அடிக்கிற எக்ஸ்ப்ரிமென்ட்.
நம்ம ஹீரோ சிவகாசி விஜய் மாதிரி சும்மா ஸ்டைலா அடிச்சு முடுசிட்டார்.
ஹீரோயின் வழக்கம் போல தான்.... சும்மாவே நின்னுகிட்டு இருந்தாங்க.
வழக்கமா ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனைனா நாடி நரம்பு எல்லாம் புடைத்துக்கொண்டு வெளிய வரும். அதே மாதிரி இவரும் போய் அவங்களுக்கு ஹெல்ப் பன்ன .... வந்துது பாருங்க ஒரு சவுண்ட் ..... ப்பா ....
அது வேற யாரும் இல்லங்க லேப் இன்சார்ஜ்.
அவரு, இங்க என்னடா பன்னுரன்னு கேக்க இவரும் ஒன்னும் இல்ல சொல்லி சமாலுச்சிட்டு வந்துட்டாரு. ஆனா நம்ம ஆளு யாரு ஹீரோவாச்சே.
சும்மா விடுவாரா.
பக்கத்து டேபிள்ல நின்னுக்கிட்டு இவரு கண்ணாலையே சொல்ல அவங்களும் அதே மாதிரி பண்ணி முடுச்ட்டாங்க.
அதுக்கு அப்புறம் இவங்க அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல இவரு கொஞ்ச பெருந்தன்மையா இட்ஸ் ஒகே ன்னு சொல்ல...... ச்ச்ஷ்ப்பா முடியல ....
அதுக்கு அப்புறம் லேபெல்லாம் முடுஞ்சு அப்படியே பர்ஸ்ட் செமஸ்டரும் முடுஞ்சுருச்சு.
அதுக்கு அப்புறம் என்ன நடந்துதுன்னு அப்புறம் பாக்கலாம்.
No comments:
Post a Comment