Wednesday, 10 October 2012

எங்கள் சொர்க்கம்-2



மீண்டும் ஒரு வாரம் கழித்து சூளைமேடு ரூம்க்கு வந்தோம்.அட்வான்ஸ் லாம் கொடுத்து ஒருவழிய ரூம்க்கு போய் செட்டில்(ரூம்ல மட்டும் தான் ) ஆயிட்டோம்.  நான், ராஜா, விஷ்ணு, சிலம்பரசன், அவரோட நண்பன், மனோஜ், ராஜா சேகர். இவங்க மட்டும் தான் அந்த ரூம்ல இருந்தோம்.  முதல் மாசம் வாடக கொடுகரதுக்குள்ள உசுரு போய் உசுரு வந்தது... பின்ன பத்தாயிரம்ல. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சிலம்பரசனும் அவனோட நண்பனும் வேலை கெடச்சு ரூம காலி பண்ணிட்டு போய்ட்டாங்க... நானும் என்னோட காலேஜ் ல படுச்ச எல்லோரையும் கூப்பிட்டேன், ஒரு நாதரியும் நான் சென்னை பக்கம் வர மாட்டேன்னு சொன்னாங்க ... கடைசியா மாதவனும்(மேடி), பாலசுந்தரம் (பெருசு ... சத்தியமா உன்னோட பேர் ரூம்ல யாருக்கும் தெரியாது பெருசு சொன்ன தான் தெரியும்யா ...பேருக்கு ஏத்த மாதிரி ஆளும் நல்ல பல்க் தான் இருப்பப்ப்ல).... இளமாறன்(வே, வி இளமாறன் இல்லேங்க எங்க கூட படுச்ச(ஊர் சுத்துன)  ஒரு மொள்ளமாரிங்க .... விஷ்ணுவும்((ஐயர்-- காலேஜ் ல கூட படுச்ச  ஐயர்  பொண்ணு  பேக்க எடுத்து கொடுத்ததோட  விளைவு )) இவனும் ஒரே ஊர்க்காரனுக ....... இதுல மாதவன், பெருசு ரெண்டு பெரும் கோர்ஸ் (Same blood) படுச்சாங்க. இளமாறன் எங்களோட வெட்டியாத்  தான் இருந்தான். இந்த குரூப்லையே ஏன் எங்க காலேஜ் லையே மொதல்ல வேலைக்கு போனது கூர்கா தான்... கூர்கா வேலை இல்லங்க. சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றன்னு சொன்னான். அது என்ன வேலையோ ஆண்டவனுக்கு தான் தெரியும்.

ஒரு மாசம் கழுச்சு எங்கள் கல்லூரி ஆணழகன் செந்தில் ராஜா வந்தான். ஒரு மாசம் வேலை தேடுரேன்னு. கொஞ்ச நாள் கழுச்சு எங்க ஏரியா ஆளுங்க ஒரு மூணு பேர் வந்தாங்க
பிரபு, சோமு, ஆனந்த். கரெக்டா அவங்க வந்த நேரம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். நாங்க எல்லோரும் காலைல பல்லு கூட வெளக்கமா... தேசப்பற்று கொஞ்சம் ஓவர் ஆகி தலைமை செயலகம் போனோம். நாங்க போய் சேரதுக்குள்ள கொடி ஏத்திட்டாங்க. சரி பீச் போய் காத்து வாங்கலாம்ன்னு போனோம். காத்து மட்டும் தான் வேற எதுவும் வாங்குற அளவுக்கு யாரும் வொர்த் இல்ல. ஆனா என்ன எங்கள மாதிரி தேசப்பற்று உள்ள ஸ்கூல் பொண்ணுங்களா இல்ல காலேஜ் போன்னுங்களான்னு தெரியல பக்கத்துல வந்து உக்காந்துதுக.

ஆனந்த், செந்தில் ராஜா, விஷ்ணு, மனோஜ், நான், பாலசுந்தரம், சோமு, மாதவன், பிரபு.


மனோஜ், விஷ்ணு, சோமு, இளமாறன், ஆனந்த், பிரபு, பாலா சுந்தரம் , மாதவன், செந்தில் ராஜா.

வேலை:-

இந்த பேர கேட்டலே ஆடோமடிக்கா உடம்பு அலர்ஜி ஆகுது.

நாங்க படுச்சு முடுச்சு வெளிய வந்தப்ப Recession ஆ, சோ எங்க போனாலும் வேலை இல்ல வெளிய போ. அப்டின்னு தொரத்தி விட்டாங்க. நாங்களும் தினமும் கரிக்குலம் விட்டே வ செராக்ஸ் எடுத்துக்கிட்டு தெருத்தெருவா சுத்தினோம். அதுல ஒரு எடம் தான் மஹிந்திர வேர்ல்ட் சிட்டி. இந்த கோஷ்டில இனொரு முக்கியமான ஆள் வந்து சேர்த்தார்.
ஸ்ரீபதி.

இந்த பேர் யார் யாருக்கு தெரியுதோ இல்லையோ எங்க சூளைமேடு ரூம பசங்களுக்கு நல்லாத் தெரியும். இவற பத்தி நாம பின்னாடி பாக்கலாம்.

நாங்க எல்லோரும் இங்க ஏதோ பிக்னிக் போற கணக்கா கெளம்பிட்டோம். இன்னொரு முக்கியமான ஆளும் அவோரோட பிரென்ட் ம் வந்தாங்க. செந்தில்(பின்னுà எங்க கிளாஸ் ரூம்லயே இவனுட பேர் பாதி பேருக்கு தெரியாது அவ்ளோ பேமஸ் இந்த பேர்) அவரோட பிரென்ட் அருண் செல்வம்.


மஹிந்திர வோர்ல்ட் சிட்டி, மறைமலைநகர்.
அருண் செல்வம், செந்தில்(ஏதோ அவனோட பொண்டாட்டி வேற யாரோடவோ ஓடிப்போன மாதிரி உக்காந்து இருக்காரே அவர் தான்), ராஜேஷ்(தெய்வ நண்பன்), ஸ்ரீபதி(தெய்வம்), இளமாறன்(மொள்ளமாரி), அர்ஜுன்(இவரும் எங்க கூட தான் கொஞ்ச நாள் இருந்தார்). செந்தில் ராஜா, விஷ்ணு, ஆனந்த்(புல்லெட்à பயபுள்ள எவ்ளோ ஒல்லிய இருக்கான்)..


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு........

இன்னொரு முக்கியமான ஆளும் இருக்கிறார். வரதராஜ்à பில்லி சூனியத்திர்ருக்கு பேர் போனவர். ஆனந்த் பக்கத்துல இருக்குறாரே அவர் தான்.


இந்த கம்பனியா யாரு மறந்தாலும் ஸ்ரீபதி மறக்க மாட்டான்.
அங்க இருக்குற வாட்ச்மேன் எங்கள கேட்டார் “தம்பிகளா எவ்ளோ சம்பளம் எதிர் பாக்குறீங்க னு”.. நாங்க ஒரு அஞ்சாயிரம் சொன்னோம். அவரு ஒரு கேவலமான ஒரு லுக் விட்டுட்டு தம்பி நானே பத்தாயிரம் வாங்குறேன் அப்படின்னார்.
நாங்களும் வெக்கமே இல்லாமா சிருச்சுகிட்டே வந்துட்டோம்.


அடுத்து எந்த ஏவுகணைய விண்ணுக்கு அனுப்பலாம்னு யோசிதிக்கொண்டி இருப்பவர் தான் எங்கள் தன்மானசிங்கம் வேணுகோபால்.


மீண்டும் செல்வோம் ..

3 comments: